Skip to main content

ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற கொள்கை ஒரு கேலிகூத்தாகவே தெரிகிறது-மனோ கணேசன்

Oct 04, 2020 251 views Posted By : YarlSri TV
Image

ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற கொள்கை ஒரு கேலிகூத்தாகவே தெரிகிறது-மனோ கணேசன் 

ஆயுதம் ஏந்தியவர்களை தெற்கில் நினைவு கூறும்போது ஏன் வடக்கில் மாத்திரம் நினைவு கூறமுடியாது. இந்த அரசாங்கம் கூறும் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற கொள்கை ஒரு கேலிகூத்தாகவே தெரிகிறதென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.



மனோ கணேசன் தனது ருவிட்டர் பக்கத்திலேயே இவ்வாறு பதிவேற்றியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர்களை அரசாங்கம் தனது கணிப்பீட்டின்படி ‘பயங்கரவாதிகள்’ என்கிறது.



அவ்வாறாயின்  1970ஆம் மற்றும்  80ஆம்  ஆண்டுகளில் இலங்கை அரசுக்கும், இராணுவத்துக்கும் எதிராக ஆயுதம் தூக்கிய ஜே.வி.பி.யின் தேசப்பிரேமி இயக்க போராளிகள், ‘சிங்கள பயங்கரவாதிகள்கள்’ ஆவர். இவர்கள் வருடா வருடம் தெற்கில் பகிரங்கமாக நினைவு கூறப்படுகிறார்கள்.



ஆனால் அதே வரப்பிரசாதம், தமிழர்களுக்கு இல்லை. ‘தமிழ் பயங்கரவாதிகளை’ என்ற தமிழ் ஆயுததாரிகளை மட்டுமல்ல, பலவேளைகளில் மரணித்த சாதாரண மக்களையே பகிரங்கமாக நினைவு கூற தமிழர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.



இது இந்நாட்டில் நீண்ட நாளாக நடந்து வரும் ஒரு இரட்டை நிலைப்பாடு கொண்ட பாரபட்ச கொள்கை ஆகும். இதற்கு இடையில் இன்று இந்த அரசு, மேலும் ஒரு கொள்கையை பற்றி பேசி வருகிறது. அதுதான் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற கொள்கை ஆகும். இது இந்நிலைமையை இன்னமும் கேலி கூத்தாக மாற்றி உள்ளது.



அதாவது, மறைந்த தமது உறவுகளை தமிழர் நினைவு கூறுவது மறுக்கபடுவதும், அதே உரிமை சிங்களவருக்கு வழங்கப்படுவதும், இந்நாட்டில் அரசின் இரட்டை கொள்கையின் அடிப்படையில் கேலி கூத்தாக அமைகிறது. மறுபுறம் தமிழ் மக்களை பொறுத்தவரையில் இது பெரும் சோகமாக அமைகிறது.



இந்த இரட்டை கொள்கை உடன் முடிவுக்கு வரவேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

2 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

2 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

2 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

2 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

2 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

5 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை