Skip to main content

3 நாட்கள் சென்னையில் இருக்க உத்தரவு- அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தகவல்!

Oct 03, 2020 208 views Posted By : YarlSri TV
Image

3 நாட்கள் சென்னையில் இருக்க உத்தரவு- அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தகவல்! 

திங்கள், செவ்வாய், புதன் ஆகிய மூன்று தினங்களும் அனைத்து அமைச்சர்களும் சென்னையில் இருக்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார்.



முஸ்லிம் மகளிர் சங்க பயனாளிகளுக்கு மேம்பாட்டிற்கான நிதி உதவி வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது. அதில் காலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை அமைச்சர் வழங்கினார்.



அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் திங்கள், செவ்வாய், புதன் ஆகிய மூன்று தினங்களும் அனைத்து அமைச்சர்களும் சென்னையில் இருக்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.



எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளதே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “என்னை ஏழாம் தேதி வரை காப்பாற்றுங்கள் என செய்தியாளர்களிடம் நகைச்சுவையாகம் கூறினார். இந்த விழாவில் அமைச்சர் வளர்மதி, மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை