Skip to main content

கட்டுகஸ்தோட்டையில் இளைஞர் ஒருவர் கொடூரமாக படுகொலை!

Feb 01, 2022 85 views Posted By : YarlSri TV
Image

கட்டுகஸ்தோட்டையில் இளைஞர் ஒருவர் கொடூரமாக படுகொலை! 

கண்டி, கட்டுகஸ்தோட்டையில் இளைஞர் ஒருவர் மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 30 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



காணி தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக குறித்த இளைஞனின் தந்தையின் சகோதரனே இக்கொலையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



நேற்று (30) காலை காணியின் எல்லை தொடர்பில்  உயிரிழந்த நபருக்கும், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரின் மனைவிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.



சந்தேகநபர் நேற்று மதியம் கொலையுண்ட இளைஞரின் வீட்டிற்கு மரம் வெட்டும் இயந்திரத்துடன் சென்று குறித்த இளைஞரை கால் மற்றும் கையை வெட்டியுள்ளார்.



எவ்வாறாயினும், பிரதேசவாசிகள் இளைஞனை பேராதனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.



இந்த கொலை தொடர்பாக சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

7 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

7 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

7 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

7 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

7 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

7 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை