Skip to main content

மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 191 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

Sep 27, 2020 228 views Posted By : YarlSri TV
Image

மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 191 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது! 

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. நாட்டிலேயே அதிக கொரோனா பாதிப்புடன் மகாராஷ்டிரா முதலிடம் வகிக்கிறது.



மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 



கொரோனா தொற்றுக்கு எதிராக களத்தில் நின்று பணியாற்றும் துறைகளில் ஒன்றான காவல்துறையைச் சேர்ந்தவர்களும் தப்பவில்லை. 



இந்நிலையில், அம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 191 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22 ஆயிரத்து 460 ஆக உயர்ந்துள்ளது. 



கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்புடன் 4 போலீசார் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை 239 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் 3 ஆயிரத்து 199 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பில் இருந்து 19 ஆயிரத்து 022 போலீசார் குணம் அடைந்துள்ளனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை