Skip to main content

இலங்கை தபால் துறைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் விசேட அறிவிப்பு!

Sep 30, 2020 240 views Posted By : YarlSri TV
Image

இலங்கை தபால் துறைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் விசேட அறிவிப்பு! 

இலங்கை தபால் சேவை தனது சேவையின் நோக்கத்தை இனங்கண்டு கொண்டால் தேசிய பொருளாதாரத்தில் பிரதான பங்குதாரராக மாற முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



தபால் சேவையிடம் காணப்படும் பாரியளவிலான வளங்களை உரிய வகையில் முகாமை செய்வதன் ஊடாக குறித்த இலக்கினை இலகுவாக அடைய முடியும் என தபால் சேவை மற்றும் வெகுஜன ஊடக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டம் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இதனை தெரிவித்துள்ளார்.



வருடம் தோறும் தபால் திணைக்களத்திற்கு 06 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுவதாக குறித்த கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது.



இதேவேளை, ஊடகவியலாளர்களின் தொழில்முறை திறன் வளர்ச்சிக்காக பயிற்சி நிறுவனத்தை நிறுவுவதற்கும் பத்திரிக்கை சட்டத்தில் திருத்ததை மேற்கொள்ள அவதானம் செலுத்தப்பட்டதாகவும் வௌிநாடடு நாடகத் தொடர் ஔிபரப்பின் போது அறவிடப்படும் வரியினை மீண்டும் செயற்படுத்த இதன் போது தீர்மானிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை