ஒரு வீரருக்கு மட்டும் ஸ்பெஷல் பயிற்சி.. இளம் புயலுக்காக நீண்ட நேரம் செலவிடும் தோனி..
Mar 09, 2022 72 views Posted By : YarlSri TV
ஒரு வீரருக்கு மட்டும் ஸ்பெஷல் பயிற்சி.. இளம் புயலுக்காக நீண்ட நேரம் செலவிடும் தோனி..
சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் ஒரு இளம் வீரருக்கு மட்டும் தோனி ஸ்பெஷல் பயிற்சி கொடுப்பது தெரியவந்துள்ளது. நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 26ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
சூரத்தில் உள்ள லால்பாய் காண்ட்ராக்டர் மைதானத்தில், தோனி தலைமையில் 15 வீரர்கள் வரை கடந்த 4 - 5 நாட்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முறை அதிகப்படியான இளம் வீரர்கள் இருப்பதால், அவர்களை சிஎஸ்கேவுக்கு ஏற்ப தயார் செய்ய வேண்டும். மேலும் மும்பையில் உள்ளதை போன்ற களத்தை கொண்ட சூரத்தில் இந்த பயிற்சி முகாமை நடத்துவதால் கூடுதல் அனுபவம் கிடைக்கும் என தோனி கணித்துள்ளார்.
இந்நிலையில் இதில் ஒரே ஒரு வீரருக்கு மட்டும் தோனி நீண்ட நேரம் செலவழித்து பயிற்சி கொடுத்து வருவதாக தெரிகிறது. அது ரசிகர்கள் எதிர்பார்த்த ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் தான். வேகப்பந்துவீச்சாளர் மற்றும் அதிரடி பேட்ஸ்மேன் என்ற 2 திறமைகளையும் ஒருசேர இருப்பதால் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒருபடி மேல் வருவார் என வல்லுநர்கள் கூறினர்.அதன்படியே தோனியும் அவருக்காக அதிக நேரம் செலவிடுகிறார்.
பயிற்சியின் போது, ஹங்கர்கேகருக்கு தோனி அறிவுரைகள் வழங்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியிருந்தன. மேலும் தீபக் சஹாரின் இடத்தை ராஜ்வர்தனை வைத்துதான் தோனி ஈடுகட்டவுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் விஜய் ஹசாரே, சையது முஷ்டக் அலி கோப்பையில் சிறப்பாக விளையாடியவர். இவருடைய சிறப்பம்சம் ரைட் ஹேண்ட் பேட்ஸ்மேனுக்கு இன் ஸ்விங் செய்ய கூடியவர்.பொதுவாக ரைட் ஹேண்ட் பேட்ஸ்மேனுக்கு ரைட் ஹேண்ட் பவுலர்கள் அவுட் ஸ்விங் செய்வார்கள். ஆனால் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் இன் ஸ்விங் செய்வார். பவுலிங்கில் சுமார் 140கிமீ க்கு மேல் சாதாரணமாக வீசக்கூடியவர். மேலும் கடைசி நேரத்தில் வந்து அதிரடியாக அடித்து நொறுக்கும் பேட்ஸ்மேன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
3 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
3 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
3 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
3 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
3 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
6 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1481 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1481 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1481 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1481 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1481 Days ago