அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீயால் ஏற்படும் பேரழிவு தொடர்ந்து வருகிறது!
Sep 30, 2020 228 views Posted By : YarlSri TV
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீயால் ஏற்படும் பேரழிவு தொடர்ந்து வருகிறது!
அமெரிக்காவில் அதிக கொரோனா நோயாளிகளை கொண்ட முதல் மாகாணமாக கலிபோர்னியா உள்ளது. அங்கு கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவிவருகிறது. இதனிடையே கொரோனாவால் முடங்கியுள்ள கலிபோர்னியா மாகாணத்தை காட்டுத்தீயும் திணறடித்து வருகிறது.
கலிபோர்னியாவில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் வெயிலின் காரணமாக மரங்கள் காய்ந்து சருகாகி விடும். அந்த சமயங்களில் மின்னல் போன்ற இயற்கை காரணிகளாலும், மனிதர்களின் தவறுகளாலும் காட்டுத் தீ ஏற்படுகிறது.
அதேபோல் இந்த ஆண்டும் கலிபோர்னியா மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. ஆனால் கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு கலிபோர்னியாவில் தற்போது காட்டுத் தீ பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
கலிபோர்னியா மாகாணத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் 16 ஆயிரத்துக்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கலிபோர்னியாவின் வடக்குப்பகுதியில் உள்ள நாபா பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று முன்தினம் திடீரென புதிதாக காட்டுத்தீ உண்டானது.
முதலில் 11 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பற்றி எரிந்த நெருப்பு அடுத்த சில மணி நேரங்களில் 4 மடங்காக கொழுந்து விட்டு எரிகிறது.
‘கிளாஸ் பயர்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நெருப்பு மேலும் தீவிரமாக பரவும் அபாயம் இருப்பதால் அதனை அணைக்கும் பணியில் ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் பெரு நெருப்பு காரணமாக நாபா பள்ளத்தாக்கு, கலிஸ்டோகா பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறி வருகின்றனர். மேலும் சோனோமா மற்றும் நாபா மாவட்டங்களில் உள்ள சாண்டா ரோசா மற்றும் செயின்ட் ஹெலினாவில் வசிக்கும் மக்களும் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி இதுவரை 68 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே நாபா பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
இதன் மூலம் கலிபோர்னியா காட்டுத்தீக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் இந்த காட்டுத்தீயில் சிக்கி மாயமாகியுள்ளனர். கலிபோர்னியாவில் நடப்பாண்டு ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக இதுவரை 37 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு நாசமாகியுள்ளது.
மேலும் காட்டுத்தீயால் கலிபோர்னியா மாகாணத்தில் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அந்த மாகாணத்தில் காற்றின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ள தேசிய வானிலை ஆய்வு மையம், அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து வேறு எதற்காகவும் மக்கள் வெளியே வராமல் வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1469 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1469 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1469 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1470 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1470 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1470 Days ago