ரூ.23,763 கோடி வழங்க வலியுறுத்தி அ.தி.மு.க.,தீர்மானம்!
Sep 29, 2020 225 views Posted By : YarlSri TV
ரூ.23,763 கோடி வழங்க வலியுறுத்தி அ.தி.மு.க.,தீர்மானம்!
ஜி.எஸ்.டி., நிலுவை தொகை மற்றும் பல்வேறு திட்டங்களுக்கான மானிய நிலுவை தொகை, 23 ஆயிரத்து, 763 கோடி ரூபாயை, தமிழக அரசுக்கு, மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்' என, அ.தி.மு.க., செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., செயற்குழு கூட்டம், நேற்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை வகித்தார். கூட்டத்தில்,15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அவற்றில் முக்கியமானவை:
* கொரோனா தொற்று காலத்திலும், மக்களின் துயர் துடைக்க, அரும்பணியாற்றி வரும் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் கட்சியினருக்கு பாராட்டு
* நாட்டிற்கே முன்னோடியாக, கொரோனா நோய் எதிர்ப்பு பணிகள், மருத்துவ பணிகள், மறுவாழ்வு பணிகள் மற்றும், சட்டம் - ஒழுங்கு நடவடிக்கைகளை சிறப்பாக செய்து வரும், தமிழக அரசுக்கும், அரசு ஊழியர்களுக்கும், தன்னார்வ தொண்டர்களுக்கும் நன்றி
* கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணத்திற்கு, மத்திய அரசு போதிய நிதியை, தமிழகத்திற்கு வழங்க வேண்டும்
* தமிழக அரசுக்கு, மத்திய அரசு தர வேண்டியுள்ள, ஜி.எஸ்.டி., நிலுவை தொகை, 4,073 கோடி ரூபாய்; திட்டங்கள் சார்ந்து அளிக்கப்பட வேண்டிய நிலுவை தொகை, 16,505.32 கோடி ரூபாய்; மானியங்கள் வகையில், 3,185.04 கோடி ரூபாய் என, மொத்தம், 23 ஆயிரத்து, 763.36 கோடி ரூபாயை, உடனடியாக வழங்க வேண்டும்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1491 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1491 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1491 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago