Skip to main content

சங்கானை மது வரி திணைக்களத்தினரின் மீது அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு!

Nov 26, 2020 240 views Posted By : YarlSri TV
Image

சங்கானை மது வரி திணைக்களத்தினரின் மீது அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு! 

வட்டுக்கோட்டை மற்றும் சுழிபுரம், பாண்டாவெட்டை, காட்டுப்புலம் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி ,மற்றும் வீடுகளில் வைத்து மதுபானங்கள் விற்பனை செய்தல் போன்றவற்றை கட்டுப்படுத்துவதில் சங்கானை மதுவரி திணைக்கள அதிகாரிகள் அசமந்தம் காட்டி வருவதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.



சங்கானை மது வரி  திணைக்களத்தின் பிராந்திய காரியாலயத்திற்கு புதிய வாகனங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும் அவர்கள் கசிப்பு உற்பத்தி மற்றும் கஞ்சா விற்பனை செய்தல், வீடுகளில் வைத்து மதுபானங்களை விற்பனை செய்தல் போன்ற நபர்களை கைது செய்வதில்லை என தெரிவிக்கப்படுகிறது. அப்பாவி சீவல் தொழிலாளர்களை கைது செய்து 750ml கள்ளுடன் நீதிமன்றத்தில் முற்படுத்தும் நடவடிக்கையை மதுவரி திணைக்கள உத்தியோகத்தர்கள்  மேற்கொண்டு வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். 



பொலிஸாரினால் கைது செய்யப்படும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் மதுபானங்களை விற்பனை செய்தல் போன்றவை மதுவரி திணைக்கள கட்டளைச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படுகிறது. மதுவரி திணைக்கள அதிகாரிகளுக்கு போதிய அதிகாரங்கள் வழங்கப்பட்ட போதும் அவர்கள் அதனை உரிய முறையில் பயன்படுத்துவதில்லை என கூறப்படுகிறது. 



எனவே மதுவரித் திணைக்கள அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்து வெளியில் வந்து வட்டுக்கோட்டை பொலிஸ் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மதுபான உற்பத்தி, போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். சங்கானை மதுவரி நிலைய அலுவலகத்துக்கு இரவு நேரங்களில் தொலைபேசி எடுத்தாலும் உரிய பதில் கிடைப்பதில்லை என பிரதேச மக்கள் கூறுகின்றனர்.



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை