Skip to main content

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் 100 கிலோ மாட்டிறைச்சி, விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது!

Sep 22, 2020 247 views Posted By : YarlSri TV
Image

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் 100 கிலோ மாட்டிறைச்சி, விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது! 

யாழ்ப்பாணம் ஜந்து சந்தி பச்சைப்பள்ளிக்கு அருகாமையில், சட்டவிரோதமாக இறைச்சியாக்கப்பட்ட 100 கிலோ மாட்டிறைச்சி, விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.



இன்று காலை 10 மணியளவில் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலினடிப்படையில், குறித்த மாட்டிறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவத்தின்போது, முச்சக்கர வண்டியில் 100 கிலோ மாட்டிறைச்சியை கொண்டு செல்ல முற்பட்டவேளை, விஷேட அதிரடிப் படையினரால் குறித்த மாட்டிறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இறைச்சியாக்குவதற்குத் தயார் நிலையில் இருந்த 33 ஆடுகளும் விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.



யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சகர் நாணயக்கார, யாழ்ப்பாணம் விசேட அதிரடிப்படை முகாமைத்துவ அதிகாரி அசோக் குமார மற்றும் பொலிஸ் பரிசோதகர் எம்.கே.எம்.பஹாத் ஆகியோரின் உத்தரவின்பேரில், புலனாய்வுத்துறையினரின் உதவியுடன், இக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



 



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

16 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

16 Hours ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

16 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை