திலீபன் நினைவேந்தல் கட்சி பேதமின்றி குரல் எழுப்புங்கள் - மாவை
Sep 22, 2020 256 views Posted By : YarlSri TV
திலீபன் நினைவேந்தல் கட்சி பேதமின்றி குரல் எழுப்புங்கள் - மாவை
தியாக தீபம் நினைவேந்தலுக்கு ராஜபக்ச அரசு விதித்துள்ள தடைக்கு எதிராகத் தமிழ்க் கட்சிகள் முன்னெடுத்துள்ள நகர்வுகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அனைத்துத் தரப்புக்களுக்கும் பெரும் நன்றிகளைக் கூறுகின்றோம்.
ராஜபக்ச அரசு விதித்துள்ள தடைக்கு எதிராக நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுக்கவேண்டும். தடை நீக்கத்துக்கு எதிராகக் குரல் எழுப்பவேண்டும்.”
இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நினைவேந்தலுக்கான தடைகளை நீக்கக் கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசிடம் தமிழ்க் கட்சிகள் ஓரணியில் முன்வைத்துள்ள நியாயமான கோரிக்கைகளை வரவேற்றுள்ள ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,
ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அஸாத் ஸாலி தலைமையிலான தேசிய ஐக்கிய முன்னணி உள்ளிட்ட முஸ்லிம் கட்சிகள், மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி,
சிறிதுங்க ஜயசூரிய தலைமையிலான ஐக்கிய சோசலிசக் கட்சி, விக்கிரமபாகு கருணாரத்ன தலைமையிலான நவசமசமாஜக் கட்சி உள்ளிட்ட முற்போக்கு கட்சிகள் ஆகியவற்றுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
எமது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிடின் நாம் முன்னெடுக்கவுள்ள சாத்வீகப் போராட்டங்களுக்கும் மேற்படி கட்சிகள் ஆதரவு வழங்க முன்வந்துள்ளமையையிட்டு நாம் பெருமகிழ்வு அடைகின்றோம்.
நாட்டிலுள்ள ஏனைய ஜனநாயகக் கட்சிகள், முற்போக்கு சக்திகள், புத்திஜீவிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் ஆதரவையும் நாம் எதிர்பார்த்திருக்கின்றோம்.
அதேவேளை, எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளில் அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் எமது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரசுக்கு அழுத்தம் கொடுத்து உரையாற்ற வேண்டும் என்றும் பணிவாகக் கேட்டுக்கொள்கின்றோம்.
இறந்த உறவுகளை நினைவுகூர ஒவ்வொரு இனத்துக்கும் உரிமையுண்டு. அதை எவரும் தடுத்து நிறுத்த முடியாது.
அரசே பொறுப்பு
தியாக தீபம் திலீபன் நினைவேந்தலுக்கான தடைகளை நீதிமன்றங்களில் ஊடாக பொலிஸாரே கோரினர். பொலிஸார் தனியார் அமைப்பினர் அல்லர்.
அவர்களும் அரசின் ஒரு முக்கிய பிரிவு. இந்தத் தடையுத்தரவுகளை பொலிஸார் ஊடாக நீதிமன்றங்களில் அரசே பெற்றுக்கொண்டது. இது அனைவரும் அறிந்த உண்மை.
நினைவேந்தல் தடையுத்தரவுகளுக்கும் அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. நீதிமன்ற உத்தரவுகளில் ஜனாதிபதி தலையிடமாட்டார் என்று சாக்குப்போக்குக் கதைகள் கூறி அரச தரப்பினர் நழுவ முடியாது.
கடந்த ஆட்சியில் பல நினைவேந்தல் நிகழ்வுகளை நாம் சுதந்திரமாக நடத்தினோம். சில இடங்களில் தடையுத்தரவுகளை நீதிமன்றங்கள் ஊடாகப் பொலிஸார் கோரியபோதும் நீதிமன்றங்கள் எமது பக்கமே நின்றன. எமது நியாயமான கோரிக்கைகளை ஏற்றன.
ஆனால், இந்த ஆட்சியில் அனைத்து நடவடிக்கைகளும் அரசின் தலையீடுகளுடன் நடக்கின்றமை வெளிப்படை.
ஏனெனில் கடந்த ஆட்சியில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடை விதிக்காத நீதிமன்றங்கள் இந்த ஆட்சியில் ஏன் தடை விதிக்கின்றன என்ற கேள்விகள் எம்மிடம் எழுந்துள்ளன.
எனவே, நீதி அமைச்சர் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட அதிகாரம் இருக்கின்றது. அதற்கு மேல் மனிதாபிமான ரீதியில் ஜனாதிபதி நினைத்தாலும் நினைவேந்தல் தடையுத்தரவுகளை நீக்க முடியும் என்றார்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
ரஷ்ய விமானங்களை வீழ்த்த உக்ரைனுக்கு உதவும் பிரித்தானியா: அதிவேக ஏவுகணைகளை வழங்க திட்டம் - செய்திகளின் தொகுப்பு
-
வீதியிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு!
-
இந்தியா இலங்கை கடன் தொடர்பில் இந்திய ஊடகம் வெளியிட்டுள்ள தகவல்!.இந்தியா, இலங்கைக்கு வழங்க உள்ள பெருந்தொகை கடன் தொடர்பான செய்திகளை இந்தியாவின் ஆங்கில ஊடகமான NDTV நேற்று வெளியிட்டுள்ளது. இந்த ஊடகத்தின் செய்திக்கு அமைய இலங்கை பணம் இல்லாத நாடு என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. நிதியின்மை காரணமாக இலங்கையால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய தேவையான டீசலை கொள்வனவு செய்ய முடியவில்லை. மின்சாரத்தை உற்பதி செய்ய முடியாத காரணத்தினால், இலங்கை மக்கள் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையின் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலைமையில் இருந்து மீள இந்திய அரசு 500 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர கடனுதவியை இலங்கைக்கு வழங்குகிறது. இந்த அவசர கடனை வழங்கும் போது பின்பற்ற வேண்டிய விசேட நிபந்தனை குறித்தும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா வழங்கும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை பயன்படுத்தி, இந்திய எரிபொருள் விநியோகஸ்தர்களிடமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. இந்தியா வழங்கும் பணத்தில் இந்தியாவிடமே எரிபொருளை கொள்வனவு செய்ய வேண்டும் என்பதே இதன் அர்த்தம். இதன் மூலம் இந்தியா வழங்கிய கடன் மீண்டும் இந்தியாவுக்கே திரும்பிச் செல்லும். அதேவேளை இந்த நிவாரணக் கடனை தவிர இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை வலுப்படுத்த மேலும் 915 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இந்தியா இணங்கியுள்ளது என NDTVயின் செய்தியில் கூறப்பட்டுள்ளது. இது சம்பந்தமான பேச்சுவார்த்தை கடந்த இரண்டு வாரங்களில் நடந்துள்ளது. இதனை தவிர மேலும் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனை வழங்குவது சம்பந்தமாக ராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இலங்கைக்கு தற்போது மிக முக்கியமாக தேவைப்படும் உணவு மற்றும் மருந்துகளை கொள்வனவு செய்ய இந்த கடன் பெறப்படவுள்ளது. இந்தியா வழங்கும் இந்த ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை பயன்படுத்தி, இந்தியாவிடம் இருந்தே உணவு மற்றும் மருந்தை கொள்வனவு செய்ய வேண்டும் என இந்தியா நிபந்தனை விதித்துள்ளதாக NDTVயின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
23 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
23 Hours agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
23 Hours agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1476 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1476 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1476 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1476 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1476 Days ago