Skip to main content

4 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்!

Sep 19, 2020 233 views Posted By : YarlSri TV
Image

4 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்! 

ஈரோடு மாவட்டத்தில், 4 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜாகிருஷ்ணன்

தொடங்கி வைத்தார்.



ஈரோடு மாவட்டம், அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொண்டையம்பாளையம், பெருமுகை, மற்றும் துறையம்பாளையம் ஊராட்சிகளில் தார்சாலை மற்றும் குடிநீர் இணைப்பு, தார் சாலை அமைக்கும் பணிகள் 4 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்டுள்ளன. இந்த பணிகளை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜாகிருஷ்ணன் பூமிபூஜையுடன் தொடங்கிவைத்தார்.



முன்னதாக கள்ளிப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.10 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்படும் கலையரங்கம் கட்டுமானப்பணியையும் ராஜா கிருஷ்ணன்

தொடங்கி வைத்தார். அப்போது, அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு சமையல் பாத்திரங்களை வழங்கியதுடன், அப்பகுதி மக்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது.



அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர் அந்தியூர் தொகுதிக்கு தேவையான திட்டங்களை முன்னின்று செயல்படுத்தி வருவதாகவும் ராஜா கிருஷ்ணன் தெரிவித்தார்.



 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை