Skip to main content

காத்தான்குடி கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு!

Sep 23, 2022 53 views Posted By : YarlSri TV
Image

காத்தான்குடி கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு! 

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி கடற்கரையில் உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவர் நேற்று  இரவு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.



நாவற்குடாவைச் சேர்ந்த 45 வயதுடைய பாக்கியரெட்ணம் ரஜேந்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.



கடற்கரையில் சம்பவதினமான இரவு சடலம் ஒன்று இருப்பதாக மீனவர்கள் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.



இதனையடுத்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நீதிமன்ற உத்தரவை பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.



இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை