மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவதனை கண்டித்து நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்!
Sep 11, 2020 253 views Posted By : YarlSri TV
மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவதனை கண்டித்து நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்!
நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உள்பட்ட யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அமைந்துள்ள சிந்துபாத்தி இந்து மயானத்தில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவதனை கண்டித்து நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த மயானத்தில் பெரும் கிடங்கு வெட்டி அதனுள் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டன. அதன் மேல் உக்கக்கூடிய கழிவுகளை கொட்டி கிடங்கு மூடப்பட்டு வந்த நிலையில் அது தொடர்பில் பிரதேச சபை தவிசாளர் , உப தவிசாளர் , சக உறுப்பினர்கள், மாநகர சபை உறுப்பினர்கள் அறிந்து அவற்றினை பார்வையிட்டனர்.
எந்தவித அனுமதிகளும் பெறப்படாது சட்டவிரோதமான முறையில் சமூகப்பொறுப்பற்ற வகையில் இந்த செயற்பாடு தொடர்பில் தமது கடும் கண்டனத்தை தெரிவித்து, யாழ்ப்பாணம் - கண்டி ஏ9 நெடுஞ்சாலையை மறித்து சுமார் 30 நிமிடங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களுடன் பேச்சுக்களை நடத்தி போக்குவரத்திற்கு இடையூறு இன்றி போராட்டத்தை முன்னெடுக்க கோரினார். அதன் பின்னர் வீதியோரமாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
ப்ளூ சட்டை, என் கண்ணுல பட்ட.. மூஞ்சிக்கு கேரண்டி இல்லை! எச்சரித்த சீரியல் நடிகர்
-
பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண பாகிஸ்தான் தயார் - இம்ரான்கான் அறிவிப்பு
-
யாழ்ப்பாணம் கொட்டடிப் பகுதியில் எலும்புக்கூடுகள் கானப்பட்ட பகுதிகளில் அகழும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன - செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு தடை
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1491 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1491 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1491 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago