Skip to main content

திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்ததை அடுத்து போலீசார் விடிய விடிய சோதனை!

Sep 11, 2020 242 views Posted By : YarlSri TV
Image

திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்ததை அடுத்து போலீசார் விடிய விடிய சோதனை! 

திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்ததை அடுத்து போலீசார் விடிய விடிய சோதனை நடத்தினர். திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு தினமும் 120 ரயில்கள் வந்து செல்கின்றன. 



தற்போது கொரோனா காலம் என்பதால் இதன் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து வர்த்தக பொருட்களும் ரயில் மூலம் சென்னை உட்பட வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. 



இந்நிலையில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், வெடிகுண்டு தயாரித்து விற்கும் 'தீபாவளி தீவிரவாதி' நடமாடுவதாக கடிதம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் விடிய விடிய சோதனை நடத்தினர். மோப்ப நாயும் வெடிகுண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர் ‌.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை