Skip to main content

வாள்வெட்டு,கொள்ளை அடித்தல் போன்ற சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் அச்சுவேலி பொலிஸாரினால் கைது!

Sep 05, 2020 250 views Posted By : YarlSri TV
Image

வாள்வெட்டு,கொள்ளை அடித்தல் போன்ற சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் அச்சுவேலி பொலிஸாரினால் கைது! 

சமூகவிரோத செயற்பாடுகளான வாள்வெட்டு,கொள்ளை அடித்தல் போன்ற சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் அச்சுவேலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம்நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. 



சிறுப்பிட்டி பகுதியில் இருந்து புத்தூர் கலைமதி ஊடாக மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களில் இருவரை புத்தூர் கலைமதி பகுதி இளைஞர்கள் மடக்கி பிடித்து அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.



இருவர் பொதுமக்களினால் பிடிக்கப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் அச்சுவேலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். எட்டுப்பேர் கொண்ட குழுவினரே வாள்களுடன் சிறுப்பிட்டி பகுதியூடாக வரும் போது இருவர் பொதுமக்களினால் பிடிக்கப்பட்டிருந்தனர். மேலும் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தப்பி சென்ற ஐவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் அச்சுவேலிபொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை