நாளை முதல் டெல்லியில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்க உள்ள நிலையில் மெட்ரோ ரயிலில் இன்று சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணி!
Sep 06, 2020 216 views Posted By : YarlSri TV
நாளை முதல் டெல்லியில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்க உள்ள நிலையில் மெட்ரோ ரயிலில் இன்று சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணி!
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவது கடந்த மார்ச் 25 ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு ஒரு சில தினங்களுக்கு முன்பாகவே, மெட்ரோ ரெயில் சேவை நாடு முழுவதும் முடக்கப்பட்டது. தற்போது, பொது முடக்கத்தில் இருந்து தளர்வுகள் அறிவிகப்பட்டு வருகின்றன.
அதன்படி, வரும் செப்டம்பர் மாதம் 7-ந் தேதி முதல் படிப்படியாக மெட்ரோ ரெயில்களை இயக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி, மெட்ரோ ரெயில் சேவைகளை துவங்க டெல்லி அரசு தயாராகி வருகிறது. மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவும் டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி,” பயணிகள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். ஸ்மார்ட் கார்டு மூலமே பயணம் செய்ய அனுமதி உண்டு. மெட்ரோ ரெயில்கள் அனைத்து ரெயில் நிலையங்களிலும் நிற்காது. குறிப்பிட்ட சில ரெயில்களில் மட்டுமே நிற்கும். சமூக இடைவெளி, உடல் வெப்ப நிலை பரிசோதனை போன்ற அனைத்து பாதுகாப்பு விதிகளும் கடுமையாக பின்பற்றப்படும் என்று டெல்லி போக்குவரத்து துறை மந்திரி கைலாஷ் கெலாட் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் டெல்லியில் 169 நாட்களுக்குப் பிறகு நாளை முதல் மெட்ரோ ரெயில் சேவை தொடங்க உள்ள நிலையில் இன்று மெட்ரோ ரெயிலில் சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணி முழுவீச்சில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மெட்ரோ ரெயில் ஊழியர்கள் ரெயில் பெட்டிகளை தீவிரமாக பரிசோதித்து வருகின்றனர். இதுதவிர ரெயிலின் இருக்கைகள், உள்ளிட்ட கருவிகள் போன்றவற்றில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதனைத்தொடர்ந்து ரெயிலின் உள்ளேயும், வெளியேயும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
3 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
3 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
3 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
3 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
3 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
6 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1481 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1481 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1481 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1481 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1481 Days ago