Skip to main content

அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்காக உறுதியாக நின்ற கேரளாவைச் சேர்ந்த கேசவானந்த பாரதி ஸ்ரீபடகல்வரு காலமானார்!

Sep 06, 2020 282 views Posted By : YarlSri TV
Image

அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்காக உறுதியாக நின்ற கேரளாவைச் சேர்ந்த கேசவானந்த பாரதி ஸ்ரீபடகல்வரு காலமானார்! 

அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்காக உறுதியாக நின்ற கேரளாவைச் சேர்ந்த கேசவானந்த பாரதி ஸ்ரீபடகல்வரு காலமானார். 1973’ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் சொத்துரிமை வழக்கு தாக்கல் செய்து அரசியலமைப்பின் கீழ் அடிப்படை உரிமைகளை வரையறுக்க உதவிய பாரதி, இன்று காலை வடக்கு கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள எடநீரில் உள்ள தனது ஆசிரமத்தில் காலமானார். அவருக்கு வயது 79.



1972’ஆம் ஆண்டு அன்றைய அரசு மேற்கொண்ட சட்டத் திருத்தம் மூலம், தனது எடநீர் மட சொத்துக்களைக் கையகப்படுத்திய கேரள அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பினார். இந்திரா காந்தி தலைமையிலான அரசாங்கம் மாற்றங்களைச் செய்த காலப்பகுதியில் வந்ததால் அவரது நடவடிக்கை வரலாற்றில் குறிப்பிடத்தக்க வகையில் மாறியது. 



வங்கி தேசியமயமாக்கல் மற்றும் தனியுரிமை வழக்குகள் ஆகியவற்றில் அரசாங்கத்திற்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பளிக்க அரசியலமைப்பின் 24, 25, 26 மற்றும் 29’வது திருத்தங்களை மேற்கொண்டதற்கு எதிராக அவர் வழக்கு நடத்தினார்.



பாரதியின் வழக்கை மூத்த வழக்கறிஞர் நானி பால்கிவாலா எதிர்த்துப் போராடினார். இந்த வழக்கை விசாரித்த அப்போதைய இந்தியாவின் தலைமை நீதிபதி சர்வ் மித்ரா சிக்ரி, 13 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்திருந்தார். அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை பாராளுமன்றம் மாற்ற முடியாது என்று அரசியலமைப்பு பெஞ்ச் அப்போது வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பளித்தது.



கேசவானந்த பாரதி மற்றும் கேரள மாநிலத்திற்கு இடையே நடந்த வழக்கு, தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் நடந்த மிக நீண்ட விசாரணையில் முதலிடம் வகிக்கிறது. 2018’ஆம் ஆண்டில், பாரதிக்கு நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண ஐயர் விருதை அப்போதைய ஆளுநரும் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுமான சதாசிவம் வழங்கினார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை