Skip to main content

ஆளுநர் அனுராதா யஹம்பத்துக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையே நேற்று (02) அலரி மாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றது!

Sep 03, 2020 308 views Posted By : YarlSri TV
Image

ஆளுநர் அனுராதா யஹம்பத்துக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையே நேற்று (02) அலரி மாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றது! 

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்துக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையே நேற்று (02) அலரி மாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.



இதன்போது கிழக்கு மாகாணத்தின் எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் ஆளுநரினால் பிரதமருக்கு தெளிவுபடுத்தப்பட்டதுடன், கிழக்கு மாகாண அபிவிருத்தி செயற்பாடுகளை விரைவுபடுத்துவதற்கு தேவையான எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.



இயற்கை அழகு கொண்ட கிழக்கு மாகாணத்தில் சுற்றாடல் துறையை மேம்படுத்துதல் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ள தொல்பொருள் பாரம்பரியத்தை பாதுகாப்பது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.



குறித்த சந்தர்ப்பத்தில் பிரதமரின் செயலாளர் காமினி செனரத்தும் கலந்து கொண்டார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

2 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை