Skip to main content

சீனாவுடனான எல்லைப் பதட்டத்தை அடுத்து லடாக்கில் இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனே ஆய்வு!

Sep 03, 2020 208 views Posted By : YarlSri TV
Image

சீனாவுடனான எல்லைப் பதட்டத்தை அடுத்து லடாக்கில் இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனே ஆய்வு! 

சீனாவுடனான எல்லைப் பதட்டத்தை அடுத்து லடாக்கில் இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனே ஆய்வு நடத்துகிறார்.



இந்த ஆண்டு ஜூன் மாதம் கால்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்களுடன் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து 2 நாட்டிற்கும் இடையே கடந்த மூன்று மாதங்களாக பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.



இந்நிலையில், சீன ராணுவம் கடந்த ஆகஸ்ட் 30 இரவு லடாக்கில் சுஷுல் அருகே பாங்கோங் தசோவின் தென் கரைக்கு அருகே இந்தியப் பகுதிகளுக்குள் அத்துமீறி நுழைய முயன்றதை இந்திய ராணுவம் முறியடித்தது. 



இதையடுத்து இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு மூத்த ராணுவ அதிகாரிகளுடன் இந்திய ராணுவத் தளபதி நேரில் ஆய்வு நடத்த உள்ளார். 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை