Skip to main content

கரோனா தொற்று பாதிப்பால் வீட்டில் இருந்து பணிபுரிந்த செளதி அரசு ஊழியர்கள் 6 லட்சம் பேர் அலுவலகத்திற்கு திரும்பி உள்ளனர்

Aug 30, 2020 250 views Posted By : YarlSri TV
Image

கரோனா தொற்று பாதிப்பால் வீட்டில் இருந்து பணிபுரிந்த செளதி அரசு ஊழியர்கள் 6 லட்சம் பேர் அலுவலகத்திற்கு திரும்பி உள்ளனர் 

கரோனா தொற்று பாதிப்பால் வீட்டில் இருந்து பணிபுரிந்த செளதி அரசு ஊழியர்கள் 6 லட்சம் பேர் இன்று அலுவலகத்திற்கு திரும்பி உள்ளனர்.



இதுகுறித்து செளதி மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,



ஆகஸ்ட் 30-ம் தேதி முதல் அனைத்து பொதுத்துறை ஊழியர்களும் அலுவலகம் வரவேண்டும். மேலும், நோய்த் தொற்று பாதிக்கப்பட்ட பகுதியில் இருப்பவர்கள் வீட்டிலிருந்து பணி புரியலாம் என தெரிவித்துள்ளது.



ஒரு அலுவலகத்தில் அதிகபட்சமாக 25 சதவீத ஊழியர்கள் மட்டுமே வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும். மேலும், அலுவலகங்களில் கைரேகை வைத்து வருகை பதிவு செய்யும் முறையை பயன்படுத்தக்கூடாது என அறிவித்துள்ளனர்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை