வடமாகாண கிரிக்கட் சம்பியனை கைப்பற்றிய மன்னார் AA சுப்பர் கிங்ஸ் அணி
Nov 06, 2023 32 views Posted By : YarlSri TV
வடமாகாண கிரிக்கட் சம்பியனை கைப்பற்றிய மன்னார் AA சுப்பர் கிங்ஸ் அணி
வடமாகாணத்தில் உள்ள சிறந்த விளையாட்டு வீரர்களை உள்ளடக்கி 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக இடம் பெற்ற லீக் முறையிலான கடினபந்து கிரிக்கட் சுற்று போட்டியில் எந்த ஒரு போட்டியிலும் தோல்வி அடையாது இறுதிப் போட்டியில் வெற்றி வாகை சூடியது மன்னார் AA சுப்பர் கிங் அணி
வடமாகாணத்தில் உள்ள 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான லீக் முறையீலான கடினபந்து சுற்றுபோட்டியானது கடந்த ஒரு மாத காலமாக வடமாகணத்தை பிரதிநிதுத்துவப்படுத்தும் வீரர்களை ஏல முறையில் கொள்வனவு செய்து யாழ் மாவட்டத்தில் இடம் நடைபெற்றது.
குறித்த சுற்றுபோட்டியானது லீக் முறையில் இடம் பெற்ற நிலையில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மன்னார் AA சுப்பர் கிங்ஸ் அணி மற்றும் கிளிநொச்சி Bulls அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (5/11/2023) யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் இறுதிப்போட்டி இடம் நடைபெற்றது.
குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கிளிநொச்சி Bulls முதலில் துடுப்பெடுத்தாட தெரிவு செய்த நிலையில், கிளிநொச்சி Bulls அணி தமது இருபது ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுகளை இழந்து 131 ஓட்டங்களை பெற்றது பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மன்னார் AA சுப்பர்கிங்ஸ் அணி 17.2 ஓவர்களில் 3 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து மன்னார் AA சுப்பர் கிங் அணி வெற்றி இழக்கை அடைந்து குறித்த சுற்றுத்தொடரை கைப்பற்றியதுடன் இரண்டு இலட்சம் பணப்பரிசையும் பெற்று கொண்டது
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1474 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1474 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1474 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1474 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1474 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1474 Days ago