கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியிலும் இங்கிலாந்தில் பள்ளி, கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்பட்டன!
Sep 01, 2020 274 views Posted By : YarlSri TV
கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியிலும் இங்கிலாந்தில் பள்ளி, கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்பட்டன!
சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வல்லரசு நாடுகளையே நடுநடுங்க வைத்த இந்த கொரோனா தொற்றால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை ஸ்தம்பித்துள்ளது. பல்வேறு நாடுகளில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவங்கள் தற்காலிகமாக மூடப்பட்டது.
மிக கொடூரமான இந்த வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசி தயாரிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அதற்கான இறுதி கட்டத்தை பல்வேறு நாடுகள் அடைந்துள்ளன.
இந்த சூழலில், கொரோனா பரவலுக்கு மத்தியிலும் இங்கிலாந்தில் பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா வைரஸால் இதுவரை 3,35,873 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 41,501 பேர் பலியாகியுள்ளனர்.
இதற்கிடையிலும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு பெற்றோரை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இது குறித்து அவர் பேசுகையில், கொரோனா வைரஸால் பள்ளியில் ஏற்படும் ஆபத்து குறைவு. குழந்தையின் வளர்ச்சிக்கும் அவர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கும் இனியும் பள்ளியிலிருந்து விலகியிருப்பது மிகவும் தீங்கு விளைவிக்கும்.
நம் குழந்தைகளை மீண்டும் வகுப்பறைக்குள் அழைத்துச் செல்வதும், அவர்களுடைய நண்பர்களுடன் இருப்பதும் மிக முக்கியம்.பள்ளிக்கு திரும்புவதைவிட வேறு எதுவும் நம் குழந்தைகளின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்திவிடாது, என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் கல்லூரிகள் இன்று முதல் இங்கிலாந்தில் 40% பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், ஆசிரியர்கள் கொரோனா முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகளுடன் வகுப்புகளுக்கு வர வேண்டும் என்றும், நேரடி தொடர்பு இல்லாமல் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது அவசியம் எனவும் பிரிட்டன் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
20 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
20 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
20 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
20 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
20 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
20 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago