Skip to main content

சென்னை சூளை பகுதியில் 10 வயது சிறுமியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த நபர் கைது !

Sep 01, 2020 250 views Posted By : YarlSri TV
Image

சென்னை சூளை பகுதியில் 10 வயது சிறுமியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த நபர் கைது ! 

சூளை பகுதியில் பெற்றோருடன் 10 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இவரது பெற்றோர் வீட்டில் மாவு விற்கும் தொழில் செய்துவந்துள்ளனர். இந்நிலையில் நேற்று பெரியமேடு ஈவேரா சாலையில் வசிக்கும் சுந்தர்(33) என்பவர் சிறுமி வீட்டிற்கு வந்து சிறுமியின் தந்தையிடம் மாவு கேட்டுள்ளார்.



மாவு கேட்டு வந்த சுந்தர் வீட்டிற்கு வெளியே விளையாட வந்த சிறுமியை கட்டிபிடித்து முத்தம் கொடுத்ததுடன் பாலியல் தொந்தரவும் கொடுத்துள்ளார்.



உடனே சிறுமி இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து அவரது பெற்றோர் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்புகாரின் பேரில் வேப்பேரி அனைத்து மகளிர் காவல் துறையினர் சுந்தர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை