Skip to main content

சுட்டுக் கொல்லப்பட்ட மாகந்துர மதூஷின் சடலத்தை அவரது மனைவியிடம் ஒப்படைக்குமாறு நீதிவான் உத்தரவு!

Oct 20, 2020 286 views Posted By : YarlSri TV
Image

சுட்டுக் கொல்லப்பட்ட மாகந்துர மதூஷின் சடலத்தை அவரது மனைவியிடம் ஒப்படைக்குமாறு நீதிவான் உத்தரவு! 

மாளிகாவத்தையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவனான மாகந்துர மதூஷின் சடலத்தை அவரது மனைவியிடம் ஒப்படைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.



சம்பவ இடத்துக்குச் சென்ற புதுக்கடை நீதிமன்ற நீதிவான், மரண விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். காவல் துறையினருக்கும் வேறு பாதாள உலக சந்தேக நபர்களுக்கும் இடையில் நடந்த துப்பாக்கிப் பிரயோகத்தின் போது மாகந்துரே மதூஷ் உயிரிழந்ததாக காவல் துறையினர் இன்று காலை தெரிவித்திருந்தனர்.



இந்நிலையில் இறந்தவரின் மனைவி சடலத்தை நீதவான் முன் அடையாளம் கண்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனைக்கு பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் காவல் துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.



மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்த இரண்டு காவல் துறை அதிகாரிகளும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை