Skip to main content

அதிகாரிகளை துப்பாக்கி காட்டி மிரட்டிய முன்னாள் அமைச்சர் -

Aug 31, 2020 234 views Posted By : YarlSri TV
Image

அதிகாரிகளை துப்பாக்கி காட்டி மிரட்டிய முன்னாள் அமைச்சர் -  

தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் உள்ள உருமட்லா பகுதியில் கால்வாய் விரிவாக்க பணிகள் நடைபெறுகின்றன. கால்வாய் விரிவாக்க பணிகளுக்காக தெலங்கானா மாநில அரசு நிலங்களை கையகப்படுத்தி உரிய இழப்பீடுகளையும் வழங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது.



இந்த நிலையில் இன்று முன்னாள் அமைச்சர் குத்தா மோகன் ரெட்டிக்கு (காங்) சொந்தமாக இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் கால்வாய் விரிவாக்க பணிகளை மேற்கொள்வதற்காக பொக்லைன் உள்ளிட்ட இயந்திரங்களுடன் இன்ஜினியர்கள், அதிகாரிகள் ஆகியோர் சென்றிருந்தனர்.



அப்போது அங்கு வந்த முன்னாள் அமைச்சர் மோகன் ரெட்டி தன்னிடம் இருக்கும் லைசன்ஸ் ரிவால்வரை காண்பித்து அதிகாரிளை மிரட்டி கால்வாய் விரிவாக்க பணிகள் செய்யாமல் தடுத்தார். அப்போது முன்னாள் அமைச்சரின் அடாவடியை தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்த நபரை அவருடைய உதவியாளர்கள் கடுமையாக தாக்கினர்.



இதனால் அதிர்ச்சி அடைந்த ஒப்பந்தகாரர், இன்ஜினியர்கள், அதிகாரிகள் ஆகியோர் அங்கிருந்து தப்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுபற்றி தெலுங்கானா மாநில நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மோகன் ரெட்டி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளனர். மோகன் ரெட்டி மீது ஆயுத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.



 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை