கொரோனா பரவல் 16 நாட்களில் மட்டுமே 10 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!
Aug 23, 2020 254 views Posted By : YarlSri TV
கொரோனா பரவல் 16 நாட்களில் மட்டுமே 10 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!
இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 16 நாட்களில் மட்டுமே 10 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் பிரேசிலை விட இந்தியாவில் நாள்தோறும் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதன்மூலம் உலகில் 30 லட்சம் பாதிப்புகளை எட்டிய 3வது நாடாக இந்தியா மாறியுள்ளது. கடந்த 17 நாட்களாகவே உலகில் நாள்தோறும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையில் அதிகளவிலான தொற்றுகள் இந்தியாவிலேயே கண்டறியப்பட்டன.
அதுமட்டுமின்றி கடந்த 4 நாட்களாக உயிரிழப்பு எண்ணிக்கை 950க்கு அதிகமாக காணப்படுகிறது. இந்தியாவில் முதல் 10 லட்சம் பாதிப்புகள் ஏற்பட நீண்ட காலஅவகாசம் தேவைப்பட்ட நிலையில், அடுத்தடுத்த 10 லட்சம் பாதிப்புகள் கண்டறியப்பட மிகக்குறுகிய காலஅவகாசமே தேவைப்பட்டது. அமெரிக்காவில் முதல் 10 லட்சம் பாதிப்புகள் ஏற்பட 98 நாட்கள் ஆகின. பிரேசிலில் 114 நாட்களும் இந்தியாவில் 138 நாட்களும் ஆகின.
அதுவே 2வது 10 லட்சம் பாதிப்புகளுக்கு அமெரிக்காவில் 43 நாட்களும், பிரேசிலில் 23 நாட்களும் தேவைப்பட்ட போதும், இந்தியாவுக்கு 21 நாட்களே போதுமானதாக இருந்தது. அதுபோலவே தற்போது 3வது 10 லட்சம் பாதிப்புகள் அமெரிக்காவில் 28 நாட்களிலும், பிரேசிலில் 23 நாட்களிலும் உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் 16 நாட்களிலேயே உறுதி செய்யப்பட்டுள்ளன.
அதேநேரத்தில் இந்தியாவில் 22 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் 30 லட்சம் பாதிப்புகளை கடந்த போது, ஒரு லட்சத்து 33ஆயிரம் உயிரிழப்புகளை சந்தித்திருந்தது. பிரேசிலும் 30லட்சம் பாதிப்புகளை கடந்த போது ஒரு லட்சம் உயிரிழப்புகளை கடந்திருந்தது.
ஆனால் இவ்விரு நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் உயிரிழப்பு சரிபாதி குறைவாகவே காணப்படுகிறது. இந்தியா 30 லட்சம் பாதிப்புகளை நெருங்கியுள்ள நிலையில், இந்தியாவின் உயிரிழப்பு 55 ஆயிரம் என்ற அளவிலேயே உள்ளது. உயிரிழப்பின் வீச்சு குறைவாக உள்ளதையே காட்டுகிறது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago