இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று இடம்பெறவுள்ளது!
Aug 20, 2020 286 views Posted By : YarlSri TV
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று இடம்பெறவுள்ளது!
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று இடம்பெறவுள்ளது.
இன்று காலை 9.30 மணி அளவில் பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ளது.
பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக 223 உறுப்பினர்கள் இன்று பாராளுமன்றத்திற்கு வருகை தர உள்ளனர்
இம்முறை பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைப் பெற்று பெரும்பான்மையை பெற்றுக் கொண்டுள்ளது.
அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி 54 ஆசனங்களையும் இலங்கை தமிழரசுக் கட்சி 10 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளது.
மேலும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 2 ஆசனங்களையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, அபே ஜனபல கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், முஸ்லிம் தேசியக் கூட்டணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இம்முறை பாராளுமன்றத்தில் தலா ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளன.
எவ்வாறாயினும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் அபே ஜனபல கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் இதுவரையில் தெரிவு செய்யப்படவில்லை என்பதனால் அவர்களின் ஆசனங்கள் வெற்றிடமாகவே காணப்படுகின்றன.
இந்நாட்டின் பழமை வாய்ந்த மற்றும் பிரதானமான அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி சுதந்திரத்திற்குப் பின்னர் பாராளுமன்ற கன்னி அமர்வில் கலந்து கொள்ளாத முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
இதேவேளை பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள 81 பேர் முதன் முறையாக பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளமை விஷேட அம்சமாகும்.
இம்முறை பாராளுமன்றத்திற்கு 25 தொடக்கம் 40 வயதிற்குட்பட்ட 25 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுள் மிகவும் இளமையானவராக ஜீவன் தொண்டமான் காணப்படுகிறார்.
40 தொடக்கம் 50 வயதிற்கு உட்பட்ட 67 உறுப்பினர்களும், 51 தொடக்கம் 60 வயதிற்கு உட்பட்ட 54 உறுப்பினர்களும் இம்முறை தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் 61 தொடக்கம் 70 வயதிற்கு உட்பட்ட 37 உறுப்பினர்களும் 71 தொடக்கம் 80 வயதிற்கு உட்பட்ட 9 உறுப்பினர்களும் இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் 81 தொடக்கம் 90 வயதிற்கு உட்பட்ட மூவரும் இம்முறை தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை இம்முறை பாராளுமன்றத்திற்கு 12 பெண் உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
3 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
3 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
3 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
3 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
3 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
6 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1481 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1481 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1481 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1481 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1481 Days ago