Skip to main content

காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் அமைப்பதற்கு பிரதேச செயலகத்தினால் காணி வழங்கி வைப்பு!

Aug 12, 2020 262 views Posted By : YarlSri TV
Image

காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் அமைப்பதற்கு பிரதேச செயலகத்தினால் காணி வழங்கி வைப்பு! 

தற்போது தனியாருக்குச் சொந்தமான வீடு ஒன்றில் இயங்கி வரும் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு புதிய போலீஸ் நிலையம் மற்றும் போலீசாருக்கான தங்குமிட விடுதி அமைப்பதற்கான காணிஆவணம் தெல்லிப்பளை பிரதேச செயலரினால்  காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ்அத்தியட்சகரிடம் கையளிக்கப்பட்டது



காங்கேசன்துறை மத்தி(J/234) கிராம அலுவலர் பிரிவில்  ஏற்கனவே பொலிசாரின் பாவனையிலுள்ள 1.14 ஏக்கர்  காணியானது இன்று தெல்லிப்பளை பிரதேச செயலரினால்  உத்தியோகபூர்வமாக போலீசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது



மேலும்  தற்பொழுது தனியார் வீடுகளில் இயங்கிவரும் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்திற்கு புதிய கட்டடம் அமைப்பதற்காக தெல்லிப்பளையில் 8 பரப்பு காணியும் பலாலி போலீஸ் நிலையம் அமைப்பதற்காக பலாலியில் 1 ஏக்கர்காணிக்கான ஆவணம் கடந்த மாதம் தெல்லிப்பளை பிரதேச செயலரினால்  போலீசாரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை