Skip to main content

மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற வடமாநில சிறுவன் தப்பி ஓடியதால் பரபரப்பு

Jun 10, 2020 234 views Posted By : YarlSri TV
Image

மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற வடமாநில சிறுவன் தப்பி ஓடியதால் பரபரப்பு  

காசிமேடு எஸ்.என்.செட்டி தெருவில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளி உள்ளது. பல்வேறு குற்றச்செயலில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட சிறுவர்கள் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் இங்குள்ள சிறுவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 35 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அனைவரும் தண்டையார்பேட்டையில் உள்ள அரசு காலரா மருத்துவமனை மற்றும் அரசு புறநகர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.இந்நிலையில், தண்டையார்பேட்டை அரசு காலரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வடமாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் நேற்று முன்தினம் நள்ளிரவு சிறப்பு வார்டு ஜன்னல் வழியாக ஏறி குதித்து தப்பி ஓடிவிட்டான். இதுபற்றி அறிந்த மருத்துவமனை ஊழியர்கள் பல இடங்களில் தேடியும் அந்த சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை.  சிறுவன் தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தது. அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிகிச்சையில் இருந்து தப்பிய வடமாநில சிறுவனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தண்டையார்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை