புதுச்சேரியில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்வு
Jun 09, 2020 286 views Posted By : YarlSri TV
புதுச்சேரியில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்வு
புதுவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தொடர்ந்து தொடக்கத்தில் நிலைமை கட்டுக்குள் இருந்தது. நீண்ட காலமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆகவே நீடித்து வந்தது. இந்தநிலையில் கடந்த ஒருமாதமாக தினந்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. லாஸ்பேட்டை, பிள்ளையார்குப்பம், முத்தியால்பேட்டை, ஜிப்மர் மருத்துவமனையில் பணியாற்றி வந்த டாக்டர்கள், காவலாளிகள் என பலருக்கு கொரோனா தொற்று பரவியது. நகர் பகுதியில் மட்டுமே பாதிப்பு இருந்து வந்தநிலையில் பாகூர், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட கிராம பகுதிகளிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதையடுத்து 70 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது மேலும் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் புதுவை கோவிந்தசாலை, கதிர்காமம் சிவாஜி நகர், பொய்யாகுளம், வீமன் நகர், மூகாம்பிகை நகர், ஆச்சாரியாபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர்.இதில் புதுவை பிராந்திய பகுதியான மாகியில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் ஏற்கனவே தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் ஆவர். நேற்று 3 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.புதுவை மாநிலத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக மொத்தம் 127 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 52 பேர் சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 75 பேர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் இதுவரை 8,274 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 8,112 பேருக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. 32 பேருக்கு பரிசோதனை முடிவு வரவேண்டி உள்ளது
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1470 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1470 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1470 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1470 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1470 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1470 Days ago