சச்சினை முதன்முதலில் சந்தித்து கைகுலுக்கியதை, கடவுளுடன் கைகுலுக்கியது போல் உணர்ந்ததாக வீரர் யுவராஜ்சிங் கூறியுள்ளார்.
Jun 12, 2020 283 views Posted By : YarlSri TV
சச்சினை முதன்முதலில் சந்தித்து கைகுலுக்கியதை, கடவுளுடன் கைகுலுக்கியது போல் உணர்ந்ததாக வீரர் யுவராஜ்சிங் கூறியுள்ளார்.
இந்திய முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ்சிங் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று ஓராண்டு ஆவதை நினைவுப்படுத்தி கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் யுவராஜ்சிங்கின் சிக்சர் அடிக்கும் திறமையை புகழ்ந்து தள்ளிய தெண்டுல்கர் அவரால் உலகில் எந்த மைதானத்திலும் சிக்சர் அடிக்க முடியும் என்றும் கூறியிருந்தார்.இதற்கு நன்றி தெரிவித்து யுவராஜ்சிங் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘நன்றி சச்சின். நான் உங்களை முதன்முதலில் சந்தித்து கைகுலுக்கியதை, கடவுளுடன் கைகுலுக்கியது போன்று உணர்ந்தேன். கடினமான காலக்கட்டங்களில் உறுதுணையாக இருந்து என்னை வழிநடத்தினீர்கள். என் திறமை மீது நம்பிக்கை வைக்க கற்று கொடுத்தீர்கள். என்னை ஊக்கப்படுத்தி முன்னேற்றப் பாதைக்கு செல்ல நீங்கள் செய்த அனைத்து விஷயங்களையும், நானும் மற்ற இளைஞர்களுக்கு செய்வேன். உங்களுடன் இன்னும் பல மறக்க முடியாத அற்புதமான நினைவுகளை எதிர்பார்க்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1488 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1488 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1488 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1489 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1489 Days ago