பொதுப்போக்குவரத்து தொடர்பில் இறுதி தீர்மானம் நாளை வெளியிடப்படும்......!
Jun 07, 2020 270 views Posted By : YarlSri TV
பொதுப்போக்குவரத்து தொடர்பில் இறுதி தீர்மானம் நாளை வெளியிடப்படும்......!
பொது போக்குவரத்து சேவை தொடர்பான இறுதி தீர்மானம் நாளை எட்டப்படுமென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலை அடுத்து தீர்மானம் எடுக்கப்படும். கலந்துரையாடலுக்கென பல்வேறு தரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்போது கிடைக்கபெறும் ஆலோசனைகளுக்கு அமைய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பயணிகள் போக்குவரத்து முன்னெடுக்கப்படுமென அமைச்சர் தெரிவித்துள்ளார். சேவையில் உள்ள அரச மற்றும் தனியார் பஸ்களுக்கு அமைய, ஆசன எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு மாத்திரம் பஸ் போக்குவரத்து சேவையை முன்னெடுத்து செல்ல முடியாது.
இதற்கென மாற்று முறையாக சுற்றுலா சேவைக்கென தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள பஸ்களை போக்குவரத்து நடவடிக்கைகளில் தற்காலிகமாக இணைத்து கொள்ள திட்டமிட்டப்பட்டுள்ளது. அவசியம் ஏற்படும் பட்சத்தில் மாத்திரம் குறித்த பஸ்களை சேவையில் இணைத்து கொள்ளுமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago