Skip to main content

தூங்கி கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கிரிக்கெட் வீரருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை...!

Jun 05, 2020 338 views Posted By : YarlSri TV
Image

தூங்கி கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கிரிக்கெட் வீரருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை...! 

பிரித்தானியாவில் தூங்கி கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கிரிக்கெட் வீரருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தண்டனையை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்துள்ளார்.



அவுஸ்திரேலியாவை பூர்வீகமாக கொண்ட Alex Hepburn (24) என்ற இளைஞன் பிரித்தானியாவின் Worcestershire கிரிக்கெட் அணியில் வீரராக இருந்தவர்.



இவர் கடந்த 2017 அடுக்குமாடி வீட்டுக்குள் மதுபோதையில் நுழைந்து தூங்கி கொண்டிருந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து தாக்கியதாக அவர் குற்றஞ்சாட்டப்பட்டது.



இதையடுத்து கைது செய்யப்பட்ட Alex மீது லண்டன் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.



அப்போது நீதிபதி ஜிம் கூறுகையில், Alex-ம் அவர் நண்பரான கிரிக்கெட் வீரர் Joe Clarkeம் சேர்ந்து பல பெண்களிடம் பாலியல் விளையாட்டில் ஈடுபட வேண்டும் என முடிவு செய்து அந்த செயலிலும் ஈடுபட்டனர்.



அப்போது தான் சம்பவம் நடந்த இரவில் Joe இளம்பெண் ஒருவரின் விருப்பத்துடன் அவருடன் உறவு கொண்டார், பின்னர் உடல்நலப்பிரச்சனை ஏற்பட்டதையடுத்து Joe கழிப்பறைக்கு சென்றார்.



அந்த சமயத்தில் அங்கு வந்த Alex தூங்கி கொண்டிருந்த அப்பெண்ணை வன்கொடுமை செய்து, தாக்கியுள்ளார்.



இந்த குற்றத்துக்காக Alexக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அறிவித்தார்.



இந்த நிலையில் தண்டனையை எதிர்த்து Alex லண்டன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.



இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று இரண்டு நீதிபதிகள் முன்னிலையில் நடைபெறவுள்ளது.


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

1 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

1 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

1 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

1 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

1 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

1 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

4 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை