நாளை முதல் அனைத்து வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வழக்குகள் எல்லாம் நீதிபதிகள் காணொலி காட்சி மூலம் விசாரிக்கப்படும்
May 31, 2020 299 views Posted By : YarlSri TV
நாளை முதல் அனைத்து வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வழக்குகள் எல்லாம் நீதிபதிகள் காணொலி காட்சி மூலம் விசாரிக்கப்படும்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சென்னை ஐகோர்ட்டில் கடந்த மார்ச் மாதம் 2-வது வாரத்துக்கு பின்னர் அவசர வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. பின்னர் மார்ச் 24-ந்தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த அவசர வழக்குகளும் காணொலி காட்சி மூலமே விசாரிக்கப்பட்டன.இந்தநிலையில், சென்னை ஐகோர்ட்டில் நாளை (திங்கட்கிழமை) முதல் அனைத்து வகையான வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. அதேநேரம், இந்த வழக்குகளை எல்லாம் நீதிபதிகள் காணொலி காட்சி மூலமாக மட்டுமே விசாரிப்பார்கள்.இதுகுறித்து நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், காலை 10.30 முதல் மதியம் 1.30 மணி வரை ‘இ-மெயில்’ மூலம் வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்குகள் எல்லாம் சம்பந்தப்பட்ட நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்படும். அவர் இந்த வழக்குகளை காணொலி காட்சி மூலமே விசாரிப்பார்கள். ஜூன் மாதம் முழுவதும் இந்த நிலையே நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1472 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1472 Days ago