அமெரிக்க படைவீரர்களின் எண்ணிக்கையை குறைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது
May 28, 2020 291 views Posted By : YarlSri TV
அமெரிக்க படைவீரர்களின் எண்ணிக்கையை குறைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது
ஆப்கானிஸ்தானில் அரசுக்கும் தலீபான்களுக்கும் இடையே நடைபெற்று வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. அங்கு அமெரிக்காவின் படைவீரர்கள் அதிக அளவில் தங்கி இருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தலீபான்களுடன் அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன் அடிப்படையில் ஆப்கானிஸ்தானில் உள்ள தனது படையை படிப்படியாக குறைக்க அமெரிக்கா முடிவு செய்து உள்ளது. அதன்படி வருகிற ஜூலை மாதத்தில் ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க படைவீரர்களின் எண்ணிக்கையை 8,600 ஆக குறைக்க அமெரிக்கா முடிவு செய்து இருக்கிறது.இது தொடர்பாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் செய்தி தொடர்பாளர் ஜோனத்தான் ஹோப்மேன் கூறும்போது “தலீபான்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி ஜூலை மாதத்தில் அமெரிக்க படைவீரர்களின் எண்ணிக்கையை 8,600 ஆக குறைக்க உள்ளோம். மேலும் ஒப்பந்தத்தின் முக்கிய சரத்து ஆப்கானிஸ்தானில் உள்ள வெளிநாட்டு படைகளை வாபஸ் பெறுவது தான். ஆப்கானிஸ்தானில் உள்ள பாதுகாப்பு சூழ்நிலைகளை ஆய்வு செய்து, நேட்டோ கூட்டணி நாடுகளின் ஒத்துழைப்புடன் ஆப்கானிஸ்தானில் இருந்து மேலும் படைகுறைப்பு செய்வது குறித்து முடிவு செய்யப்படும்” என்றார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago