Skip to main content

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மியன்மார் வாசிகளை மலேசியா நாடுகடத்தியுள்ளது!

Feb 25, 2021 172 views Posted By : YarlSri TV
Image

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மியன்மார் வாசிகளை மலேசியா நாடுகடத்தியுள்ளது! 

பல்வேறு எதிர்ப்புகளுக்கும் மத்தியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மியன்மார் வாசிகளை மலேசியா நாடுகடத்தியுள்ளது.



மியன்மாரில் இடம்பெறும் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட நிலையில் அரசியல் தஞ்சம் கோரி மலேசியாவிற்கு பிரவேசித்தவர்களே இவ்வாறு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.



அவர்களது நாடுகடத்தலுக்கு எதிரான உத்தரவினை மலேசிய நீதிமன்றம் பிறப்பித்திருந்த போதும், அவற்றை புறந்தள்ளி அவர்கள் நாடுகடத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.



இவ்வாறு 1086 பேர் மொத்தமாக நாடுகடத்தப்பட்டிருப்பதாகவும், அவர்களுள் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுபான்மை இனத்தவர்களும் அடங்குவதாகவும் மனித உரிமைகள் அமைப்புகள் தெரிவித்துள்ளன.



மியன்மாரில் தற்போது இராணுவ ஆட்சி இடம்பெறுகின்ற நிலையில், அவர்களை நாடுகடத்தி இருப்பது அவர்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்றும் மனித உரிமைகள் அமைப்புகள் எச்சரித்துள்ளன.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

2 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

2 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

2 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

2 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

2 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

5 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை