ராணுவ வீரர் நினைவு தினத்தில் நடந்த துப்பாக்கி சூடு 9 பேர் கொல்லப்பட்டனர்.
May 26, 2020 339 views Posted By : YarlSri TV
ராணுவ வீரர் நினைவு தினத்தில் நடந்த துப்பாக்கி சூடு 9 பேர் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிர அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்கா, உலக அளவில் கொரோனா தொற்று இறப்பு விகிதத்தில் முதல் இடத்தில் உள்ளது.
அந்த நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17 லட்சம் ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 99 ஆயிரத்து 459 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த, அனைவரும் வீடுகளில் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதனுடன், கடுமையான புயல்களும் அந்நாட்டை உருக்குலைத்து வருகிறது.
அமெரிக்காவில் ஒவ்வொரு வருட மே மாதத்தின் இறுதி திங்கட்கிழமை, ராணுவத்தில் பணியாற்றி உயிரிழந்த வீரர், வீராங்கனைகளை நினைவுகூரும் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. அந்நாளில் விடுமுறை விடப்படும். அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசிக்கும் பொதுமக்கள் ராணுவ அருங்காட்சியகம், நூலகம் போன்றவற்றிற்கு செல்வார்கள்.
இது தவிர்த்து, விடுமுறை நாளை கழிக்க பீச், ஏரிக்கு மக்கள் செல்வர். மோட்டார் சைக்கிள்களில் நகர்வலம் வருவர். இந்த நிலையில், அமெரிக்காவின் சிகாகோ நகரில் நினைவுதின விடுமுறையில் கூடி இருந்தவர்கள் மீது நடந்த துப்பாக்கி சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த 2019ம் ஆண்டு இதேபோன்று நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 7 பேர் பலியாகினர். 43 பேர் காயமடைந்தனர். 2016ம் ஆண்டில் 6 பேர் கொல்லப்பட்டனர். 69 பேர் காயமடைந்தனர். இதேபோன்று 2015ம் ஆண்டில் பலி எண்ணிக்கை 12 ஆக இருந்தது.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
5 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago