ஜனாதிபதிக்கு சல்யூட் அடிக்க மாட்டேன்! என கூறிய முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா
May 20, 2020 287 views Posted By : YarlSri TV
ஜனாதிபதிக்கு சல்யூட் அடிக்க மாட்டேன்! என கூறிய முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா
பத்ரமுல்லையில் உள்ள படை வீரர்கள் நினைவிடத்தில் நேற்று நடைபெற்ற தேசிய போர் வீரர்கள் தின நிகழ்வில் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை கலந்துகொள்ள வைப்பதற்காக அரச தரப்பில் கடும் முயற்சிகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக அந்த நிகழ்வில் சரத் பொன்சேகா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு சல்யூட் அடித்து மரியாதை வழங்கும் காட்சியை ஊடகங்கள் வாயிலாகப் பிரசாரம் செய்ய அரச தரப்பில் அக்கறை காட்டப்பட்டது என சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சரத் பொன்சேகாவை தொடர்பு கொண்டு அவர் நிகழ்வில் கலந்துகொள்வதை உறுதிப்படுத்த அரச தரப்பில் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனினும் அவற்றிற்கு பொன்சேகா பதிலளிக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் ஊடக இணைப்பதிகாரியான ரொஹான் வெலிவிட்ட நேற்று முன்தினம் சரத் பொன்சேகாவை தொடர்புகொள்ள முயற்சித்துள்ளார். எனினும் அது பயனளிக்கவில்லை.
இது தொடர்பாக தனது அரசியல் நண்பர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள சரத் பொன்சேகா, பீல்ட் மார்ஷல் ஒருவர் ஒருபோதும் லெப்டினன்ட் கேர்ணல் ஒருவருக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தமாட்டார். நான் அந்த நிகழ்வுக்குச் செல்ல மாட்டேன் என்று கூறினார் என பொன்சேகாவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச லெப்டினன்ட் கேர்ணல் தரத்திலிருந்தே ஓய்வு பெற்றார் என்பதும் அந்த தர நிலைக்கு அப்பால் கேர்ணல், பிரிகேடியர், மேஜர் ஜெனரல் நிலைகள் எல்லாம் தாண்டி பீல்ட் மார்ஷல் பட்டத்தை சரத் பொன்சேகா பெற்றிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
4 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
4 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
4 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
4 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
4 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1482 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1482 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1482 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1482 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1483 Days ago