Skip to main content

மே-18, இன எழுச்சி நாள் – சீமான் எழுச்சியுரை!

May 19, 2020 303 views Posted By : YarlSri TV
Image

மே-18, இன எழுச்சி நாள் – சீமான் எழுச்சியுரை! 

நேற்று மே 18 அன்று மாலை சரியாக 6.10 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான இராவணன் குடிலில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சீமான் அவர்கள் எழுச்சிச் சுடரேற்றினார், கூடியிருந்த நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி இன மீட்சிக்கு உறுதிமொழியேற்று உயிரிழந்த உறவுகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.





இலக்கு ஒன்றுதான்! – எம் இனத்தின் விடுதலை! எங்கள் மாவீரர் சிந்திய குருதி! எங்கள் தாயகம் மீட்பது உறுதி! புரட்சி எப்போதும் வெல்லும்! – நாளை எம்மின விடுதலை அதைச் சொல்லும்! உறுதியாக நாங்கள் வெல்லுவோம்! – இதை உரக்க உலகிற்குச் சொல்லுவோம்! தமிழர்களின் தாகம்! தமிழீழத் தாயகம்!. என்று முழங்கினார்



உள்ளத்தில் அணையா பெருநெருப்பாய் பற்றியெரியும் இன உணர்வினை அடைகாத்து அதனை மற்றவருக்கும் பற்ற வைத்து இன விடுதலையை வென்றெடுக்க மீண்டெழுவோம் என்று உணர்ச்சி சூடேற்றினார்!


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை