ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு பாராட்டு விழா நடத்திய சிரஞ்சீவி!
Aug 24, 2021 156 views Posted By : YarlSri TV
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு பாராட்டு விழா நடத்திய சிரஞ்சீவி!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் அடுத்தடுத்து இரு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை பெறும் முதல் இந்திய பெண் வீராங்கனை என்கிற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிந்துவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிரஞ்சீவி, பி.வி.சிந்துவுக்கு விருந்துடன் கூடிய ஒரு பாராட்டு விழாவை நடத்தி உள்ளார். ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, சிரஞ்சீவி தனது நண்பர்கள் வட்டாரத்திலிருந்து பலரையும் அழைத்திருந்தார்.
குறிப்பாக தமிழ் நடிகைகள் ராதிகா சரத்குமார், சுகாசினி மணிரத்னம் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பி.வி.சிந்துவுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், ஒலிம்பிக்கில் அவர் வாங்கிய வெண்கலப் பதக்கத்தை கையில் வைத்துக்கொண்டு சிந்துவுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
1 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
1 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
1 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1476 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1476 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1476 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1476 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1476 Days ago