Skip to main content

சிறுவனிடம் மது அருந்த பணம் கேட்டவருக்கு எதிராக யாழ் மக்களின் துணிச்சல் வேலை...!

May 21, 2020 296 views Posted By : YarlSri TV
Image

சிறுவனிடம் மது அருந்த பணம் கேட்டவருக்கு எதிராக யாழ் மக்களின் துணிச்சல் வேலை...! 

தென்மராட்சிப் பகுதியில் மது அருந்தப் பணம் கொடுக்காத பாடசாலை மாணவனை தாக்கிய ஒருவரை அந்தப் பகுதி மக்கள் சேர்ந்து தாக்கியதில் அவர் படுகாயமடைந்துள்ளார்.



இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,



கொரோனா தொற்றின் பின்னர் தென்மராட்சி மட்டுவில் மாவித்தியாலயத்திற்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்ட மரக்கறி விற்பனை நிலையம் ஒன்றிற்கு அருகில் அந்த விற்பனை நிலைய உரிமையாளரும் இன்னொருவரும் மது அருந்தியுள்ளனர்.



16 வயதான மாணவரொருவர் அந்த வர்த்தக நிலையத்தில் பணிபுரிந்துள்ள நிலையில் அந்தச் சிறுவனிடம் மது அருந்த ஒருவர் பணம் கேட்டுள்ளார்.



சிறுவன் பணம் கொடுக்க மறுத்தபோது கத்தியால் சிறுவனை தாக்க முயன்றுள்ளார். இதன் போது சிறுவனின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது.



இந்த சம்பவத்தை கண்ட அந்தப்பகுதி மக்கள் குறித்த நபரை நையப்புடைத்த வேளை அவரது தலையில் பெரிய வாள் வெட்டு காயமும் ஏற்பட்டுள்ளது.



அத்துடன் நடு வீதியில் அவரது மோட்டார் சைக்கிளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.



சிறுவனும் தாக்குதலை மேற்கொண்ட நபரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து தாக்குதலை மேற்கொண்ட நபர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை