Skip to main content

கடற்படை சிப்பாய்கள் இருவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி

May 19, 2020 322 views Posted By : YarlSri TV
Image

கடற்படை சிப்பாய்கள் இருவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி 

ஸ்ரீலங்காவில் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு நாளாக தமிழர்கள் நினைவுகூர்ந்து வரும் வேளையில் அதே தினத்தை அரசாங்கம் போர் வெற்றி நாளாகா கொண்டாடி வருகிறது.



அந்த வகையில் மே 18 ஆம் திகதியான நேற்று பதினோராவது வருட நினைவு நாளாக தமிழர் பகுதியில் இராணுவ கெடுபிடிக்கு மத்தியில் தமிழர்கள் நினைவுகூர்ந்தவேளையில் இராணுவ வீரர்களை நினைவுகூறும் வகையில் மேற்கொள்ளப்படும் அணிவகுப்பு பயிற்சி இடம்பெற்றது.



இந்நிலையில் குறித்த அணிவகுப்பு பயிற்சியில் பங்கேற்ற கடற்படை சிப்பாய்கள் இருவருக்கே கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.



இந்த கடற்படை சிப்பாய்களின் முதலாவது PCR பரிசோதனை அறிக்கை முடிவினை மீண்டும் உறுதி செய்வதற்காக இரண்டாவது பரிசோதனை மேற்கொள்வதற்கு அவசியமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.



அணி வகுப்பிற்காக ஈடுபடுத்தப்பட்ட கடற்படை சிப்பாய் ஒரு மாத காலகமாக தனிமைப்படுத்தப்பட்டு, பீ.சீ.ஆர். பரிசோதனைகளில் கொரோனா வைரஸ் தொற்றவில்லை என உறுதி செய்யப்பட்டவர்கள் என பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.



இதற்கு முன்னர் பல முறை இவ்வாறு முதலாவது PCR பரிசோதனைகளில் கொரோனா தொற்றியுள்ளதாக உறுதியாகிய நோயாளிகள் இரண்டாவது பரிசோதனையில் கொரோனா இல்லை என தெரியவந்துள்ளது.



இதன் காரணமாக இந்த கடற்படை சிப்பாய்களுக்கும் மீண்டும் PCR பரிசோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.



இந்த சிப்பாய்களுக்கும் முதலாவது சோதனையில் கொரோனா உறுதியாகியதனை தொடர்ந்து அவர்களின் அருகில் இந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை