புலம் பெயர் தொழிலாளர்களை ஏற்றி சென்ற 3 கன்டெய்னர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
May 18, 2020 309 views Posted By : YarlSri TV
புலம் பெயர் தொழிலாளர்களை ஏற்றி சென்ற 3 கன்டெய்னர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
உத்தரப் பிரதேசத்தில் சொந்த ஊர்களுக்கு செல்ல முயன்ற 178 புலம் பெயர் தொழிலாளர்களை ஏற்றி சென்ற 3 கன்டெய்னர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த இரண்டு மாதங்களாக நீடிக்கும் தேசிய அளவிலான ஊரடங்கு காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் புலம் பெயர் தொழிலாளர்கள் சிக்கி தவிக்கின்றனர். இவர்களை அனுப்பி வைக்க சிறப்பு ரயில்களை மாநிலங்கள் ஏற்பாடு செய்துள்ளன. எனினும், பல தொழிலாளர்கள் விதிமுறைகளுக்கு மாறாக அங்கீகாரம் இல்லாத வாகனங்களில் செல்வது அதிகரித்து வருகின்றது. உத்தரப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் மட்டும் 3 கன்டெய்னர் லாரிகளில் சென்ற 178 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முயன்ற சம்பவம் நடந்துள்ளது.
நேற்று முன்தினம் மாலை கன்டெய்னர் லாரி ஒன்று பஞ்சாபின் லூதியானா நோக்கி சென்றுகொண்டிருந்தது. உத்தரப் பிரதேசம், ஷாம்லி மாவட்டத்தில் கன்டெய்னர் லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 78 தொழிலாளர்கள் இருந்தனர். இதனால், லாரியை பறிமுதல் செய்த போலீசார் அதில் இருந்த தொழிலாளர்களை நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல், முசாபர்நகரில் 60 தொழிலாளர்கள் கன்டெய்னரில் மறைந்து பயணம் செய்தனர். அவர்களை மீட்ட போலீசார், சிறப்பு ரயில்கள் மூலமாக சொந்த மாநிலமான மேற்கு வங்கம் அனுப்பிவைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதேபோல் நேற்று முன்தினம் இரவு முசாபர்நகர் மாவட்டத்தின் பாக்லா சோதனை சாவடி அருகே நடத்தப்பட்ட வாகன சோதனையில் லாரி மூலமாக செல்ல முயன்ற 40 புலம் பெயர் தொழிலாளர்களும் மீட்கப்பட்டனர்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
5 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
5 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
5 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
5 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
5 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1482 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1482 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1482 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1483 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1483 Days ago