Skip to main content

ஊரடங்கு நேரத்தில் மருத்துவமனைக்கு ரத்த தானம் செய்து அசத்தியுள்ளார் இந்திய கால்பந்து வீரர் ஜீஜே.

Apr 18, 2020 382 views Posted By : YarlSri TV
Image

ஊரடங்கு நேரத்தில் மருத்துவமனைக்கு ரத்த தானம் செய்து அசத்தியுள்ளார் இந்திய கால்பந்து வீரர் ஜீஜே. 

ஊரடங்கு நேரத்தில் மருத்துவமனைக்கு ரத்த தானம் செய்து அசத்தியுள்ளார் இந்திய கால்பந்து வீரர் ஜீஜே.



இந்திய கால்பந்து அணியின் முன்னணி வீரர் ஜீஜே லால்பெகுலா 29. ஐ.எஸ்.எல்., தொடரின் சென்னை அணிக்காக விளையாடுகிறார். தற்போது கொரோனா வைரஸ் தடுப்பிற்காக ஊரடங்கு அமலில் உள்ளதால் மிஜோரமில் தங்கியுள்ளார்.



இங்குள்ள அரசு சாராத 'யங் மிஜோ' சங்கத்தில் (ஒய்.எம்.ஏ.,) உறுப்பினராக ஜீஜே உள்ளார். மிஜோரமில் இயங்கி வரும் இது, வடகிழக்கு மாநிலங்களில் மிக பிரபலம். இக்கட்டான நேரங்களில் மக்களுக்கு உதவுவதில் ஒய்.எம்.ஏ., முன்னணியில் உள்ளது. இதனிடையே சைனோடு மருத்துவமனைக்கு ரத்த தானம் செய்து உதவியுள்ளார் ஜீஜே.



இதுகுறித்து அவர் கூறியது:



பொதுவாக மருத்துவமனையில் ரத்த 'யூனிட்' குறைந்து விட்டால் அவர்களுக்கு நாம் உதவ வேண்டும். தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக இப்போது தேவையான ரத்த பிரிவு வகைகள் சரியாக கிடைப்பதில்லை. இதனால் மருத்துமனையில் இருந்து உதவிக்காக என்னை தொடர்பு கொண்டனர். அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் என உடனடியாக களமிறங்கினேன்.



ஏனெனில் இதுபோன்ற நேரத்தில் வீட்டில் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருக்க முடியாது. தகவல் கிடைத்த அடுத்த சிறிது நேரத்தில் நாங்கள் டர்ட்லாங் மருத்துவமனைக்கு விரைந்தோம். 33 பேர் வந்ததில் 27 பேர் ரத்தம் தருவதற்கு தகுதியாக இருந்தனர். இவ்விஷயத்தில் எனது பங்கு சிறியளவு தான். இருப்பினும் இது திருப்தியளிக்கிறது. இதற்கு தேவையான பலம் தந்த இறைவனுக்கு நன்றி.



இப்போதுள்ள சூழ்நிலை என்னைப் பற்றியோ அல்லது வேறு சிலர் குறித்தோ இல்லை. ஒட்டுமொத்த மனிதகுலமும் ஒன்றாக இணைந்து போராட வேண்டிய தருணம் இது. நெருக்கடியான நேரத்தின் போது நமது பங்களிப்பை தர வேண்டும். ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருப்பது முக்கியம் தான். எனினும் ரத்தத்தின் தேவையும் அவசியம். தொடர்ந்து வீட்டில் இருந்தால் இந்தியா, இக்கட்டான நிலையில் இருந்து விரைவில் மீண்டு விடும்.



இவ்வாறு ஜீஜே கூறினார்.



உயிர் காக்க உதவுங்கள்



ரத்த தானம் செய்த போட்டோவை 'டுவிட்டர்' சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட ஜீஜே கூறுகையில்,''ரத்த தானம் செய்யுங்கள், உயிர் காக்க உதவுங்கள்,'' என தெரிவித்துள்ளார்


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

2 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

2 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

2 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

2 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

2 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

5 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை