Skip to main content

பாடசாலை விடுமுறயில் ஏற்பட்ட மாற்றம்: மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

Jan 17, 2024 28 views Posted By : YarlSri TV
Image

பாடசாலை விடுமுறயில் ஏற்பட்ட மாற்றம்: மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்! 



தவணை விடுமுறை முடிவடைந்து, பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் திகதி பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.



அதன்படி, 2023 ஆம் ஆண்டின் 3 ஆம் தவணைக்கான இரண்டாம் கட்டமானது எதிர்வரும் பெப்ரவரி 05 ஆம் திகதியன்று ஆரம்பமாகவுள்ளது.மீள் பரீட்சை

இந்த, 2023 ஆம் ஆண்டின் 3 ஆம் தவணையின் இரண்டாம் கட்டத்தை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி ஆரம்பிக்க கல்வி அமைச்சு முதலில் தீர்மானிக்கப்பட்டது .



 தற்போது நடைபெற்று வரும் 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைகளின் விவசாய விஞ்ஞான வினாத்தாள்கள் இரத்து செய்யப்பட்டு மீள் பரீட்சைக்கான திகதியும் அறிவிக்கப்பட்டுள்ளது

அதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதியன்று பரீட்சையை மீள நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.



க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான வினாத் தாள் பகுதி 1 மற்றும் 2 ஆகிய இரு தாள்களும் தேர்வுக்கு முன் சமூக வலைதளங்களில் கசிந்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து பரீட்சைகள் திணைக்களம் குறித்த வினாத்தாள்களை மும்மொழிகளிலும் இரத்து செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை