Skip to main content

நிலக்கரி சுரங்கத்தில் விபத்து : சீனாவில் சம்பவம் 10 பேர் பலி!

Jan 13, 2024 32 views Posted By : YarlSri TV
Image

நிலக்கரி சுரங்கத்தில் விபத்து : சீனாவில் சம்பவம் 10 பேர் பலி! 

மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 10 பேர் பலியாகியுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர். 



இந்த விபத்து நேற்றைய தினம் (12) பிற்பகல் 2.55 மணியளவில் ஏற்பட்டுள்ளது. 



சுரங்கப்பணிகள் நிகழ்ந்துகொண்டு இருந்த போது, திடீரென ஏற்பட்ட விபத்தின் காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 6 பேரின் நிலை தகவல்  அறிய முடியாததாக இருப்பதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.



வெடிப்பு சம்பவம் 

"நிலக்கரி மற்றும் எரிவாயு வெடித்ததன் காரணமாகவே அந்த இடத்தில் விபத்து நிகழ்ந்ததாக தெரியவந்துள்ளது.

மேலும், இந்த விபத்தின் போது, சுரங்கத்தில் 425 பேர் வரை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாகவும் தெரிய வருகின்றது .


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை