ஹரியாணாவில் அமலாக்கத் துறை சோதனை: முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ரூ.5 கோடி சிக்கியது..!
Jan 06, 2024 28 views Posted By : YarlSri TV
ஹரியாணாவில் அமலாக்கத் துறை சோதனை: முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ரூ.5 கோடி சிக்கியது..!
ஹரியாணாவில் முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ரூ.5 கோடி, 5 கிலோ தங்கம், 5 வெளிநாட்டு துப்பாக்கிகள், 300 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஹரியாணாவில் சுரங்க தொழிலில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். இதன்படி காங்கிரஸ் எம்எல்ஏ சுரேந்தர் பன்வாரின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதேபோல இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ தில்பக் சிங்கின் வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. போக்குவரத்து, சுரங்கம், பிளைவுட் உள்ளிட்ட தொழில்களை அவர் நடத்தி வருகிறார்.
இதுகுறித்து அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: முன்னாள் எம்எல்ஏ தில்பக் சிங்வீட்டில் சோதனை நடத்தியபோது கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் சிக்கின. இதன் மொத்த மதிப்புரூ.5 கோடி. அதோடு தங்க பிஸ்கட்கள் உட்பட 5 கிலோ தங்கமும் பிடிபட்டது. வெளிநாடுகளில் தில்பக் சிங் பல்வேறு சொத்துகளை குவித்துள்ளார். இதுதொடர்பான ஆவணங்களும் சிக்கியுள்ளன.
அவரது வீட்டில் இருந்து 5 வெளிநாட்டு துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவருக்கும், ஹரியாணாவின் பிரபல தாதா காலா ராணாவுக்கும் இடையே முன்பகை இருக்கிறது. இருதரப்புக்கும் இடையேபலமுறை துப்பாக்கி சண்டை நடந்துள்ளது. உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் துப்பாக்கிகளை வைத்திருந்தாகவும் அவற்றுக்கு உரிமம் இருப்பதாகவும் தில்பக் சிங் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக உள்ளூர் போலீஸாரின் உதவியுடன் விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
18 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
18 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
18 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
18 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
18 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
18 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago