Skip to main content

ரஷ்யா - உக்ரைன் பிரச்சினையில் இஸ்ரேல் அமைதி காப்பது ஏன்?

Mar 05, 2022 63 views Posted By : YarlSri TV
Image

ரஷ்யா - உக்ரைன் பிரச்சினையில் இஸ்ரேல் அமைதி காப்பது ஏன்? 

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல் 9ஆவது நாளாக நீடித்து வருகின்றது.



உக்ரைன் மீது சரமாரியாக ஏவுகணைகளையும், குண்டுகளையும் வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில்,உக்ரைன் நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி ஒரு போதும் சரணடையமாட்டோம் என்று பதிலடி தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளார்.



இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு எதிராக உலக நாடுகள் பல தொடர்ச்சியாக ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பல பொருளாதார தடைகளை தொடர்ச்சியாக விதித்த வண்ணம் உள்ளது.



ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரஷ்யா மீது அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜப்பான், தைவான்,ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகள், பொருளாதார தடை, ராஜாங்க ரீதியான பயணத் தடை உள்ளிட்ட தடைகளை விதித்துள்ளதுடன், மேலும் பல நாடுகள்  உக்ரைனுக்கு நிதி உதவியினையும்,ஆயுத உதவியினையும் வழங்கிய வண்ணம் உள்ளது.



இவ்வாறான சூழ்நிலையில், ரஷ்யா- உக்ரைன் பிரச்சினையில் இஸ்ரேல் தலையீடு செய்யாது அமைதி காப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை