Skip to main content

குளவி கொட்டுக்கு இலக்கான பெண் மரணம்!

Jan 05, 2024 72 views Posted By : YarlSri TV
Image

குளவி கொட்டுக்கு இலக்கான பெண் மரணம்! 

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உ ட்டப்பட்ட பட்டல்கல தோட்டத்தில்   குளவி கொட்டுக்கு இலக்கான பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார்என  தெரிய வருகின்றது. 



குறித்த தோட்டத்தில்  நேற்று மாலை வேளையில் பயணித்து கொண்டு இருந்த வேளையில் 7 பேர் பட்டல்கல தோட்ட காரியாலய பகுதியில் வைத்து குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த வேலையில் 78 வயது உடைய சதாசிவம் சிந்தை என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார் .



இதேவேளை மேலும் 6 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 



இதில் 14 வயது உடைய சிறுவன் ஒருவன் அடங்குவதாக டிக்கோயா கிளங்கன் வைத்திய சாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.



மேலும் குளவி கொட்டுக்கு இலக்கான பெண் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த வேலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என அவர் தெரிவித்துள்ளார் .


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை